விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

குமராட்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

குமராட்சி அருகே சி.அரசூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிதாக பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டிட வேண்டும். மாணவர்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் சி.அரசூர் கிராம மக்கள் சார்பில் குமராட்சியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குமராட்சி ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் செல்வகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஜெயக்குமார் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story