நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா


நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
x

நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்்தது. நேற்று காலை 7 மணி அளவில் கோவிலுக்கு வந்த அம்மனுக்கு மலர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) லட்சுமி அலங்காரம், 29-ந்தேதி சரஸ்வதி அலங்காரம், 30-ந்தேதி மதன கோபால அலங்காரம், 31-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், ஜூன் 1-ந்தேதி சேரசயன அலங்காரம், 2-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 4-ந்தேதி பெரிய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் சகல பிரார்த்தனைகளும், காவடி வைபவங்களும் செலுத்தி வழிபாடு செய்கின்றனர். 7-ந்தேதி இரவு தேரில் அம்பாள் எழுந்தருளி, நின்ற திருக்கோலத்தில் வெள்ளி குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். 16-ந்தேதி இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர் எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.


Next Story