மதுபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மதுபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மதுபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே பெருமநாடு கோனாவயலை சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் தனது உறவினரின் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறைக்கு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து விக்னேசை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story