அகில இந்திய அளவிலான கபடி போட்டி தொடக்கம்


அகில இந்திய அளவிலான கபடி போட்டி தொடக்கம்
x

அகில இந்திய அளவிலான கபடி போட்டி தொடங்கியது.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள பிரமாண்ட திடலில் மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் அரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதேபோல் பல்வேறு துறைகளை சேர்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஆண், பெண் என அணிகளுக்கு தனித்தனியாக நடைபெறும் கபடி போட்டியின் தொடக்கமாக நேற்று முதல் போட்டியை தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். ஆனால் போட்டி தொடங்கியதுமே மழை பெய்ய தொடங்கியது. இதனால் முதல் நாளில் ஆட்டம் நடைபெறவில்லை. இன்று(வெள்ளிக்கிழமை) போட்டிகள் நடக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு, தொடங்கி வைத்து, வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்குகின்றனர். இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.50 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சமும், 3-ம் இடம் மற்றும் 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு தலா ரூ.50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதே போல் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.25 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் மற்றும் 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு தலா ரூ.50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.


Next Story