சென்னை மண்டலத்தில் அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு மாற்றம் - தமிழக அரசு உத்தரவு


சென்னை மண்டலத்தில் அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x

சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், நிர்வாக காரணங்களுக்காக சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்ட பதிவாளர்களும் நேற்று மாற்றப்பட்ட நிலையில், இன்று சார்பதிவாளர்களை மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story