ஆசிரியைக்கு ஆபாசமாக செய்கை காண்பித்ததாக புகார்: தோட்டக்காரர் மீது போலீசார் வழக்கு


ஆசிரியைக்கு ஆபாசமாக செய்கை காண்பித்ததாக புகார்: தோட்டக்காரர் மீது போலீசார் வழக்கு
x

ஆலங்குளம் அருகே ஆசிரியைக்கு ஆபாசமாக செய்கை காண்பித்ததாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து தோட்டக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியைக்கு, அங்கு வேலை செய்யும் தோட்டக்காரர் ஒருவர் ஆபாச செய்கை காண்பித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தாளாளரிடம் ஆசிரியை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அவருடைய உறவினர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். பின்னர் அவர்கள், பள்ளிக்கூடம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து அந்த ஆசிரியை, ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அந்த பள்ளிக்கூடத்தில் தோட்ட வேலை பார்த்து வரும் நிக்சன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story