வெள்ளப்பெருக்கு குறைந்ததால், கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்ததால், கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

தடை நீங்கியதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்காணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்தது.

இதனால், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 31ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால், 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளது. தடை நீங்கியதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story