மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x

நெல்லையில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன் முன்னிலை வகித்தார். பாளையங்கோட்டை தெற்கு பகுதி மாற்று கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகராஜன், பகுதி செயலாளர் சண்முககுமார், வக்கீல் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story