மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்


மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

ஆழ்வார்திருநகரியில் மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஸ்ரீவைகுண்டம், திருப்புளியங்குடி, ஆழ்வார்திருநகரி வட்டாரப்பகுதிகளை சேர்ந்த தே.மு.தி.க, பா.ஜ.க., மக்கள்தேசம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன்பு நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ஆழ்வை கோதண்டராமன், லூர்துமணி, பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கர் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் சுமார் 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், எடிசன், ஷாம், லெட்சுமணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசைசங்கர், ஆழ்வை நகர பொறுப்பாளர் அபுதாகீர், வட்டார நிர்வாகிகள் விஜயங்கரன், மோகன்ராஜ், ரமேஷ், நகர துணைத்தலைவர் ஆஸ்கின், பால்குளம் விவேகானந்தன், ஊடகப்பிரிவு முத்துமணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாரத்தலைவர் கோதண்டராமன் நன்றி கூறினார்.


Next Story