முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பணகுடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பணகுடி:
பணகுடி திருஇருதய உயர்நிலைப்பள்ளியில் 1988-1989-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அருட்சகோதரர் ஆரோக்கியம் பீற்றர் தலைமை தாங்கினார். திருஇருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்மிர் முன்னிலை வகித்தார். திருஇருதய பள்ளிகளின் அதிபர் அருட்சகோதரர் சேசு அருளானந்தம் ஆசியுரை வழங்கினார். விழாவில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பிறகு அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





