ஆழ்வார்திருநகரி புனித அன்னமாள் ஆலய திருவிழா சப்பர பவனி


ஆழ்வார்திருநகரி புனித அன்னமாள் ஆலய  திருவிழா சப்பர பவனி
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 6:46 PM GMT)

ஆழ்வார்திருநகரி புனித அன்னமாள் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி புனித அன்னமாள் ஆலய திருவிழா கடந்த ஜூன் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது. பத்தாம் திருவிழாவான நேற்று சப்பர பவனி நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி கடைவீதிகள் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக சப்பர பவனி வலம் வந்து மீண்டும் ஆலய வளாகத்திற்கு வந்தடைந்தது. இதில், தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story