திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைப்புசங்க ஆலோசனை கூட்டம்


திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைப்புசங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கம் சார்பில் தேரடி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வேம்படி முத்து மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். வருவாய் கிராம கணக்கில் இந்த பூங்காவிற்கு அம்பேத்கர் பெயரை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடந்த 1962-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் திருச்செந்தூரில் முன்னாள் அமைச்சர் கக்கன் பங்கேற்ற திறப்பு விழா கல்வெட்டை மீண்டும் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அமைக்க வேண்டும். இதுகுறித்து வருகிற தமிழக மழைக்கால கூட்டத்தொடரில் தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.

கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பக மாநில பொறுப்பாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மீனவர் அணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story