வெண்ணந்தூர் அருகேதடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்


வெண்ணந்தூர் அருகேதடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வி.பி.சி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் தியாகராஜன் (வயது 30). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் தியாகராஜன் மற்றும் 2 பேர் சேர்ந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை அழைத்து வர சென்றனர்.

அதன்படி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்தசமயம் ஆம்புலன்ஸ் வழிமாறி அங்கு மேம்பால பணிகள் நடக்கும் பகுதியில் சென்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தியாகராஜன் உள்பட 3 பேர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story