பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா

பாலக்கோடு அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து கங்கை, கணபதி பூஜை நடந்தது. நேற்று அம்மனுக்கு அபிஷேகம், பூக்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு கிராமமக்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





