பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா


பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா
x

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மன் பூத வாகனத்தில் வீதி உலா நடந்தது. இந்த வீதி உலா கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்றது. இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள், ஓதுவார் மூர்த்திகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story