முதல் கணவரின் கை துண்டிப்பு


முதல் கணவரின் கை துண்டிப்பு
x

முதல் கணவரின் கை துண்டிப்பு ஆனது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு பகுதியில் சாமிபுரம் காலனியை சோந்தவெங்கடேசன் மகன் அருண் (வயது 23). இவரும், சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில நாட்களில் காதல் தம்பதி பிரிந்தனர். இதை தொடர்ந்து அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் தமிழ்வளவன் என்கிற அழகு (21) என்பவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் அந்த இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சம்பவத்தன்று காலை 10 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வீட்டார் பல இடங்களில் பெண்ணை தேடினர். இதற்கிடையில் பெண்ணின் அண்ணன், அருணிடம் தனது தங்கை குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக தமிழ்வளவன் உள்பட சிலர் இருந்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் அண்ணன் அரிவாளால் அருணை வெட்டி உள்ளார். அப்போது அவர் தடுக்க முயன்ற போது கை மணிகட்டு பகுதி துண்டாகி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அருணின் தாய் மீனா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் வளவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.



Next Story