8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது


8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது
x

நாட்டறம்பள்ளி அருகே 8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே உள்ள கொயாக்காமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர், வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டு திடுக்கிட்டு பார்த்த போது 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மா மரத்தடியில் ஊர்ந்து சென்ற சுமார் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

1 More update

Next Story