8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது


8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
x

8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே கீழபளுவஞ்சியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று இருந்து கொண்டு அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து நார்த்தாமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story