தமிழகத்தில் 2,765 பேருக்கு கொரோனா 80 வயது முதியவர் உயிரிழப்பு


தமிழகத்தில் 2,765 பேருக்கு கொரோனா 80 வயது முதியவர் உயிரிழப்பு
x

தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 765 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை,

நேற்று புதிதாக 31 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,563 பேரும், பெண்கள் 1,202 பேரும் உள்பட 2 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,011 பேர், செங்கல்பட்டில் 408 பேர், திருவள்ளூரில் 184 பேர், கோவையில் 125 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 134 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 438 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 18 ஆயிரத்து 378 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 397 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 716 பேரும், திருவள்ளூரில் 982 பேரும், கோவையில் 914 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 797 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 103 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 37 ஆயிரத்து 193 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story