ஷூ சாக்சில் மறைத்து ராடுகள் கடத்திய ஊழியர் கைது


ஷூ சாக்சில் மறைத்து ராடுகள் கடத்திய ஊழியர் கைது
x

புலிவலம் தனியார் கம்பெனியில் ஷூ சாக்சில் மறைத்து ராடுகள் கடத்திய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காட்பாடி தாலுகா காசிகுட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 22) என்பவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் இரவு பணி முடிந்து இன்று அதிகாலை வெளியே வந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த ரங்கநாதன் என்பவர் அவரை சோதனை செய்தார்.

அப்போது சீனிவாசன் தனது ஷூ சாக்சில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 7 டிரில்லிங் ராடுகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

உடனடியாக அவரை கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் பாதுகாவலர் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 7 ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story