ராஜேஷ்குமார் எம்.பி.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு


ராஜேஷ்குமார் எம்.பி.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு
x

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜேஷ்குமார் எம்.பி.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல்

தி.மு.க.வில் மாவட்ட நிர்வாகிகளுக்கான 15-வது பொதுத் தேர்தல் நடந்தது. அதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த நேற்று ராஜேஷ்குமார் எம்.பி. வந்தார். முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக தேர்வாகி முதன் முதலாக நாமக்கல்லுக்கு வந்த ராஜேஷ்குமார் எம்.பி.க்கு, தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ராஜேஷ்குமார் எம்.பி.க்கு வீரவாள் வழங்கப்பட்டது. பின்னர் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினரை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கட்சியினர் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துகளை வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எம்பெரர் இளம்பரிதி, காந்தி என்கிற பெரியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், வக்கீல்கள் அய்யாவு, வடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story