பசுமாடு முட்டியதில் முதியவர் சாவு


பசுமாடு முட்டியதில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM GMT (Updated: 18 Jan 2023 7:23 AM GMT)

விழுப்புரம் அருகே பசுமாடு முட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள அயினம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 70). இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாக்கியநாதன் என்கிற அப்பு ஓட்டிவந்த பசுமாடு திடீரென மிரண்டு தாமோதரன் மீது பாய்ந்து முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகள் விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story