கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கு சொந்தமான கிணற்றில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திம்மாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் மல்லபள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கோபால் (வயது 80) என்பதும், கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






