விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

விபத்தில் முதியவர் பலியானார்

திருநெல்வேலி

வி.எம்.சத்திரம்:

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பவுல் நகரை சேர்ந்தவர் நயினார் (வயது 85). இவர் சீனிவாசன்நகர் நான்கு வழிச்சாலை அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நயினார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நயினார் பாிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story