விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

விபத்தில் முதியவர் பலியானார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி (வயது 75). இவர் அய்யனாபுரம் பகுதியில் நடந்து செல்லும் பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story