சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி


சேலம் மாவட்டத்தில்  கொரோனாவுக்கு முதியவர் பலி
x

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 16 பேர், கெங்கவல்லியில் 4 பேர், வீரபாண்டி, தாரமங்கலத்தில் தலா 2 பேர், நங்கவள்ளி, ஓமலூர், கொளத்தூர், எடப்பாடி, ஆத்தூர், மேட்டூரில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு தர்மபுரியில் இருந்து வந்த 2 பேர், சென்னையில் இருந்து வந்த 2 பேர், கரூர் மற்றும் ஈரோட்டில் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார்.


Next Story