துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி


துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி
x

துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் உள்ள பரியேறும் குட்டையில் நேற்று காலை முதியவரின் உடல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், குட்டையில் பிணமாக மிதந்தவர் அத்தியூர் கக்கன்ஜி நகரை சேர்ந்த முத்து கருப்பன் (வயது 85) என்பது தெரிய வந்தது. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலை குளிப்பதற்காக பரியேறும் குட்டைக்கு சென்றார். அப்போது குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story