கோவில் அருகே பிணமாக கிடந்த முதியவர்


கோவில் அருகே பிணமாக கிடந்த முதியவர்
x

கோவில் அருேக பிணமாக கிடந்த முதியவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அய்யப்பன் கோவில் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி செந்தாமரை செல்வி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story