மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் பலியானாா். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ கவிழ்ந்து டிரைவரும் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

முதியவர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பூமாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (வயது 65). இவர் நேற்று மாலை கமுதி வந்து விட்டு பூமாவிலங்கை கிராமத்துக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அரிசிக்குழுதான் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த சதீஷ்குமார் (33) என்பவரின் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ கவிழ்ந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் ஆட்டோவை நிறுத்தாமல் கமுதி நோக்கி வேகமாக சென்று விட்டார். அவர் அரண்மனை மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சதீஷ்குமாரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கல்யாணி மற்றும் சதீஷ்குமாரின் உடல்களை மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story