மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 67) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story