மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 1:00 AM IST (Updated: 16 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற முதியவர் கைது

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கட்டபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு முன்னதாக அதிகாலையில் அனுமதியின்றி சிலர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை கட்டபெட்டு குடுமனை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் கட்டபெட்டு பங்கலோரை கிராமத்தை சேர்ந்த இஸ்மாயில்(வயது 67) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story