கோவிலில் சாமி தரிசனம் செய்த போது சேலையில் விளக்கு தீப்பிடித்து மூதாட்டி பலி


கோவிலில் சாமி தரிசனம் செய்த போது சேலையில் விளக்கு தீப்பிடித்து மூதாட்டி பலி
x

கோவிலில் சாமி தரிசனம் செய்த போது சேலையில் விளக்கு தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.

திருவள்ளூர்

திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் ஊராட்சியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 80). இவர் தனது மகன் நவநீதம் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி கூளூர் கிராமத்தில் உள்ள நாகலம்மன் பங்கஜம் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்த விளக்கின் அருகே நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது விளக்கு தீ அவரது சேலையில் பிடித்து உடல் முழுவதும் பரவியது.

இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை பக்தர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டி பங்கஜம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story