சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பாிதாபமாக இறந்தார்.
விருதுநகர் அருகே உள்ள பி.குமார்லிங்காபுரத்தில் தனியாக வசித்து வந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 95). இவர் தண்ணீர் சுடவைத்தபோது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த தீக்காயங்களோடு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் சுந்தரராஜ் (65) கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





