ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு


ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

விழுப்புரம்

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் கன்னியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி காசியம்மாள்(வயது 78). கடந்த 12-ந் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற காசியம்மாள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவொரு தகவலும் இல்லை. இந்நிலையில் நேற்று விழுப்புரம் அருகே பில்லூரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் காசியம்மாள் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். அவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story