ஓடும் ரெயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி


ஓடும் ரெயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி
x

ஓடும் ரெயிலுக்கு அடியில் மூதாட்டி சிக்கினார்.

திருச்சி

மணப்பாறை:

ரெயிலுக்கு அடியில் சிக்கினார்

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையம் அருகே ஒரு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் காய்கனி மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சில சமயங்களில் பயணிகள் ரெயில்கள் வரும்போது சரக்கு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். அப்போது ரெயில்வே கேட்டை கடந்து, அந்த ரெயில் நிற்கும். அந்த நேரத்தில் சிலர் ரெயிலுக்கு அடியில் படுத்தபடி நகர்ந்து சென்று ரெயிலை கடந்து செல்வார்கள்.

அதேபோல் நேற்று அங்கு சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு மூதாட்டி, அந்த ெரயிலின் அடியில் ஊர்ந்து சென்றபடி கடக்க முயன்றார். அப்போது திடீரென ரெயில் புறப்பட்டு செல்லத் தொடங்கியது. இதனால் மூதாட்டி ரெயிலுக்கு அடியில் சிக்கியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும்படி அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர்.

வீடியோ வைரல்

இதைக்கண்ட பணியில் இருந்த ரெயில்வே கேட் கீப்பர் உடனடியாக ரெயிலை இயக்குபவர்களை தொடர்பு கொண்டு, ரெயிலின் அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதை தெரிவித்தார். இதனால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மூதாட்டி மீட்கப்பட்டார்.

இந்நிலையில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் ெதாடர்பான வீடிேயா தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஓடும் ரெயிலுக்கு அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதும், ரெயில் சென்றபோது அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும்படி அங்கிருந்தவர்கள் கூறுவதும், ரெயில் நின்றதும் அந்த மூதாட்டி வெளியே வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடிேயா தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story