மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு பயிற்சி


மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு பயிற்சி
x

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் சங்கீதா வரவேற்றார். இதில் செயல் அலுவலர் சதீஷ்குமார், தரவு பயிற்றுனர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தரவுகள் சேகரிப்பது, பயன்படுத்துவது, புதிய திட்டங்களுக்கு இப்பகுப்பாய்வு குறித்து செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர். உதவி பேராசிரியர் அருண்நேரு, தரவுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் கணிதம், இயற்பியல் மற்றும் கணினித்துறை மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விரிவுரையாளர் விவேக் நன்றி கூறினார். முதுகலை 2-ம் ஆண்டு மாணவி லலிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

1 More update

Next Story