அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளார் - மருத்துவர்கள் தகவல்


அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளார் - மருத்துவர்கள் தகவல்
x

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார். காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் இல்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்


Next Story