கிணற்றில் தவறிவிழுந்து அங்கன்வாடி ஊழியர் பலி


கிணற்றில் தவறிவிழுந்து அங்கன்வாடி ஊழியர் பலி
x

பாணாவரம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து அங்கன்வாடி ஊழியர் பலியானார்.

ராணிப்பேட்டை

பாணாவரத்தை அடுத்த மகேந்திரவாடி கிராமம், பெரிய தெருவில் வசித்துவரும் ஆறுமுகம் என்பவரின் மனைவி பாரதி (வயது 32). இவர் அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story