ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி


ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி
x

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை தொடங்குகிறது.

திருப்பூர்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை தொடங்குகிறது.

யானைகள் கணக்கெடுப்பு பணி

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெற்று வருகிறது. அதன்படி தென் இந்தியாவில் கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை (புதன்கிழமை) முதல் 19-ந் தேதி வரை 2 நாட்கள் நடைபெறுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. நாளை பிளாக் கவுண்ட் முறையில் சுற்றுகளில் 15 கிலோமீட்டர் நடந்து சென்று நேரடியாக தென்படும் யானைகள் கணக்கீடு செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 2 கிலோமீட்டர் நேர்கோட்டுப் பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்பு

வருகிற 19-ந் தேதி நீர்நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடி முறையில் யானைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் நேற்று உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை, அமராவதி, கொழுமம் வந்தரவு வனச்சரக அலுவலர்கள் உயிரியலாளர் மகேஷ்குமார், வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story