அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை


அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை
x

42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அண்ணா பல்கலைகழகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.

சென்னை,

2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அண்ணா பல்கலைகழகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வந்தனர்.

பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரண்டுள்ள பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வருகையால் பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story