கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்


கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்
x
தினத்தந்தி 30 Sept 2023 5:30 AM IST (Updated: 30 Sept 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

கைலாசபட்டி கைலாசநாதர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனி

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை ேசர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்து சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை வர்த்தக பிரமுகர் பாண்டியராஜ் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story