அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி


அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி
x

அண்ணா பிறந்தநாள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கரூர்

மாரத்தான் போட்டி

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம்-தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 288 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு (8 கி.மீ தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி கரூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வெங்கக்கல்பட்டி பாலம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

பரிசுகள்

25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்களுக்கு (10 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி மரத்தான் கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக மணவாடி பாரத் பெட்ரோல் நிலையம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெண்களுக்கு (5 கி.மீ. தூரம்) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று வெங்கக்கல்பட்டி பாலம் ரவுண்டனா வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த மாரத்தான் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் பெற்றவர்களுக்கு ரூ.-3 ஆயிரமும், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.-2 ஆயிரமும் 4 முதல் பத்தாமிடம் வரை பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரம் என 28 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


Next Story