அரசு பள்ளி ஆண்டு விழா


அரசு பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 19 April 2023 6:45 PM GMT (Updated: 19 April 2023 6:46 PM GMT)

தேவகோட்டை அருகே உள்ள நாச்சாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியின் கல்வி திருவிழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள நாச்சாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியின் கல்வி திருவிழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரகுமார் தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமிதேவி, மாலதி முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் திருவாத்தாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பூங்கொடி ஆண்டு அறிக்கை வாசித்தார். வேட்டையழகு, ஊராட்சி மன்ற தலைவர் மதிவண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஆசிரிய பயிற்றுனர் ராஜசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஆனந்தா கல்லூரி அருட்தந்தை டென்சிங்ராஜன் வாழ்த்துரை வழங்கினர். இதையொட்டி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி பரிசு, விளையாட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.


Next Story