மெக்கநாச்சியம்மன் கோவில் வருடாபிஷேக விழா


மெக்கநாச்சியம்மன் கோவில் வருடாபிஷேக விழா
x

மெக்கநாச்சியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றன

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை நாகலிங்கம் நகரில் உள்ள மெக்கநாச்சி யம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மெக்கநாச்சியம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், நமச்சிவாயம் ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story