தண்டீஸ்வர அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா


தண்டீஸ்வர அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:45 PM GMT)

தண்டீஸ்வர அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் தண்டீஸ்வரர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான 41-வது வருடாபிஷேக விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் விசேஷ பூஜைகள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றன. விழாவில் 8-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜகாளி அம்மனுக்கு சுற்றுப்பொங்கல் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்பு அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு 11-ம் நாள் நிகழ்ச்சியாக தண்டீஸ்வர அய்யனார் சுவாமிக்கும் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் தீர்த்த பூஜை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

======


Next Story