வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் வெள்ளியப்பன் (வயது 30). இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை மூக்கன் உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற சுப்பு (35) என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





