ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது


ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவரிடம், அவரது நண்பர்களான முரளி, ராஜேஷ், சசி ஆகியோர் மது குடிப்பதற்காக ரூ.2 ஆயிரம் கடன் வாங்கினர். அந்த பணத்தை விஜய் திரும்ப கேட்டதால் நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி கே.கே.நகர் அம்பேத்கர் காலனியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு விஜயை அங்கு வரவழைத்தனர். அப்போது 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் விஜயை குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த விஜய், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் முரளி (32) கடந்த மாதம் 17-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கே.கே.நகர் அம்பேத்கர் குடிசைப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற புளிமூட்டை ராஜேஷ் (20) நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ராஜேஷ், எம்.ஜி.ஆர். நகர் போலீஸ்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சசியை போலீசார் தேடி வருகின்றனர்.h


Next Story