நாட்டு வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்.
நெல்லை டவுன் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சிலர் நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து அதை வீசி வெடிக்க செய்தனர். மேலும் அவர்கள் தங்களின் செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித் (19) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மற்றொரு நபரான டவுன் ஆசாத் நகரை சேர்ந்த தவுபிக் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





