டிராக்டர் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி


டிராக்டர் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
x

போளூரில் டிராக்டர் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் விஸ்வா (வயது 25), கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்கள் ஆகாஷ் (20), சஞ்சய் (20) ஆகியோருடன் தேவிகாபுரத்தில் வேலைக்கு சென்றனர்.

அங்கு வேலை முடிந்து 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் போளூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மட்டப்பிறையூர் அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டரும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் விஸ்வா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஸ்வா, ஆகாஷ் ஆகிய இருவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story