போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 26 Jun 2023 2:30 AM IST (Updated: 26 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, நத்தத்தில் போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் போலீசார் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். நத்தம் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் மீனாட்சிபுரம், கடைவீதி, கோவில்பட்டி, மூன்றுலாந்தர், அவுட்டர் பகுதி வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் முடிந்தது. அதன்பிறகு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story